ஈரோடு மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா தாெற்று பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது.

Update: 2022-06-19 14:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் தினமும் கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. இன்று இரண்டு பேருக்கு தொற்று உறுதியானது. இன்று இரண்டு பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தற்போது, 23 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதில் மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் மட்டுமே, கொரோனா பரிசோ தனை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News