ஈரோடு மாவட்டத்தில் இன்று 154 பேருக்கு கொரோனாவால் பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் இன்று 722 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2022-02-11 16:15 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 83 பேருக்கு பரிசோதனை செய்ததில் 184 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்நிலையில் இன்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி புதிதாக மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்து 682 ஆக உயர்ந்தது.

மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 722 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 28 ஆயிரத்து 099 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 730 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 2 ஆயிரத்து 853 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News