நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி கோயிலில் 1008 சங்காபிஷேகம்

16 வகை பொருட்களைக் கொண்டு கைலாசநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது

Update: 2021-11-22 23:15 GMT

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.

கோயில் சந்நிதியில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கைலாசநாதர் செண்பகவல்லி அம்மனுக்கு இளநீர், சந்தனம்,ஜவ்வாது,மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகை பொருட்களைக்கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.பின் கைலாசநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News