நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்:

நத்தம் பேருந்து நிலையம் முன் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

Update: 2024-04-28 06:16 GMT

நத்தத்தில் ,அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேருந்து நிலையம் முன் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் திறந்து வைத்தார்.இதில் ,சர்பத், எலுமிச்சை பழ பானம், மா, வாழை, தர்பூசணி, திராட்சை, உள்ளிட்ட பழ வகைகளும் பொதுமக்களுக்கு வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில்,

நத்தம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஆர்.வி.என்.கண்ணன்,தெற்கு ஒன்றிய செயலர்கள் மணிகண்டன்,சின்னு, மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், நகர அவைத் தலைவர் சேக்ஒலி,மாவட்ட குழு உறுப்பினர் பார்வதி,சின்னாகவுண்டர், ஊராட்சி மன்ற தலைவர்களள் ஜெயப்பிரகாஷ் ,ஆண்டிச்சாமி மற்றும் ஒன்றிய, நகர, கிளை ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் குப்பான் மீனாட்சிபுரம் கிளை நிர்வாகிகள் வேலு, மாரிமுத்து உள்ளிட்ட ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல, கோபால்பட்டி பேருந்து நிறுத்தம் முன், அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.

Tags:    

Similar News