நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை

நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 40 நிமிடம் பெய்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

Update: 2021-08-22 14:46 GMT

நத்தத்தில் இன்று பெய்த மழையால் சாலையில் ஓடும் மழைநீர்

தமிழகத்தில் மேலடுக்கு சுழர்ச்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை  மையம் கூறியிருந்த நிலையில்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளான கோவில்பட்டி வேலம்பட்டி, காந்திநகர், காமராஜ் நகர் , அசோக் நகர் ,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் பகல் நேரங்களில் வானம் மேகக்கூட்டமாக காட்சி அளித்தது. இந்நிலையில் இன்று மாலை சுமார் 40 நிமிடம் பெய்த மழையினால்  தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. 

மேலும் ஆவணி மாத தொடக்கத்தில் பெய்த மழை பெய்ததால்,  விவசாயிகள் தங்கள் மானாவரி விவசாய பணிகளை தொடங்க உதவியாக இருக்கும்.  மேலும் நத்தம் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News