நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ விழா: பக்தர்கள் தரிசனம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் -கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா நடந்தது.

Update: 2021-11-16 14:09 GMT

நத்தம் -கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா நடந்தது.

நத்தத்தில் பிரதோஷ விழா ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் -கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ விழா நடந்தது. இதில் நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர்,சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது.

தொடர்ந்து மூலவர் கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News