கதிர் நரசிங்க பெருமாள் கோயில் ஆஞ்சநேயர் ஜெயந்தி வழிபாடு

ஆஞ்சநேயருக்கு தாமரை, முல்லை, மல்லிகை, ஜாதிப்பூ, செவ்வந்தி, சம்பங்கி, ரோஸ், துளசியால் அலங்கரித்து வடைமாலை சார்த்தப்பட்டது

Update: 2022-01-03 02:30 GMT

திண்டுக்கல் மாவட்டம் வி. மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

திண்டுக்கல் மாவட்டம் வி. மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயருக்கு  நடைபெற்ற சிறப்பு அலங்காரம் ,அபிஷேகம் , ஆராதனை. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர.

அனுமன் ஜெயந்தியையொட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோபால்பட்டி அருகே வி. மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.பால், தயிர் தேன் உள்ளிடவைகளில் அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனைகள் தீபாரதனை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தாமரை, முல்லை, மல்லிகை, ஜாதிப்பூ, செவ்வந்தி, சம்பங்கி, ரோஸ், துளசி உள்ளிட்ட வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வடைமாலை சாத்தப்பட்டு ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் கோபால்பட்டி, சாணார்பட்டி,நத்தம், உலுப்பகுடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் நரசிம்மன் ராஜசிம்மன் மற்றும் கண்ணன் ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News