நத்தம் அருகே கார்த்திகைக்காக வித விதமான அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

கொரோனா தொற்று காரணமாக விற்பனை குறைவாக இருந்ததாகவும் தற்போது தளர்வுகள் உள்ளதால் விற்பனை நன்றாக உள்ளதாகவும் தெரிவித்தனர்

Update: 2021-11-12 15:30 GMT

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கார்த்திகைக்காக மண்ணால் ஆன வித, விதமான தீப விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருக்கார்த்திகை நாளன்று வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். இதற்காகவே நத்தம் அருகே நொச்சிஓடைப்பட்டியில் வருடந்தோறும் மண்ணால் ஆன விளக்குகளை தயாரித்து திண்டுக்கல், மதுரை,திருச்சி, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

இங்கு லட்சுமி விளக்கு, பிள்ளையார் விளக்கு, மேஜிக் விளக்கு ,அன்னம் விளக்கு, மயில்விளக்கு, குத்து விளக்கு,அடுக்கு விளக்கு உள்ளிட்ட 50 வகையான மாடல்களில் விதமான விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை ஒரு ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக விற்பனை குறைவாக இருந்ததாகவும் தற்போது தளர்வுகள் உள்ளதால் விற்பனை நன்றாக உள்ளதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.பொது மக்களும் விளக்குகளை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர். கார்த்திகை திருநாள் நெருங்கி வருவதால் மண்விளக்கு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News