கழிவறையில் பதுங்கியிருந்த பாம்பை பிடித்த தீயணைப்புத்துறையினர்

பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் நத்தம் தீயணைப்புத்துறையினர் ஒப்படைத்தனர்

Update: 2021-11-23 12:45 GMT

நத்தம் கோவில்பட்டியில் கழிவறையில் பதுங்கியிருந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர்

நத்தம் கோவில்பட்டியில் கழிவறையில் பதுங்கியிருந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த தீயணைப்புத்துறையினர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டி கீழத் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரது வீட்டில் கழிவறைக்கு சென்றபோது அங்கு நல்லபாம்பு ஒன்று பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக நத்தம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்புத்துறை நிலை அலுவலர் திருக்கோள் நாதர் தலைமையில், தீயணைப்புத் துறையினர் உடனடியாக சென்று,  ராதாகிருஷ்ணனின் வீட்டின் கழிவறையில் பதுங்கியிருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

Similar News