ஆடி மாத மூன்றாவது வெள்ளி: நத்தம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்

Natham Mariamman Images-ஆடி மாத மூன்றாவது வெள்ளி முன்னிட்டு, நத்தம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-08-06 12:39 GMT

சிறப்பு அலங்காரத்தில் நத்தம் மாரியம்மன்.

Natham Mariamman Images-திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோவிலில் ஆடி மாத மூன்றாவது வெள்ளிக்கிழமையை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.சர்வ அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும், ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து விளக்கேற்றி தரிசனம் செய்தனர். இதைப்போலவே பகவதி,காளியம்மன், தில்லைகாளியம்மன் ஆகிய கோவில்களிலும் ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இங்கும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News