திமுகநிர்வாகி தோட்டத்தில் சிக்கிய வெளிமாநில மதுபாட்டில்கள்: 5 பேர் கைது

காவல்துறை சோதனையில் அதிக அளவு மது பாட்டில்கள் பிடிபட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

Update: 2021-09-22 04:52 GMT

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் திமுக நிர்வாகி தோட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட  வெளிமாநில மதுபான பாட்டில்கள்

திமுக கிளைச் செயலாளர் தோட்டத்தில் பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட 11500 மது பாட்டில்களை காவல் துறையினர் கைப்பற்றி 5 பேரை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவுக்குள்பட்ட அனுமந்தராயன் கோட்டை பகுதியில் வெளிமாநில மதுபாட்டில்கள் விற்பபனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல்கிடைத்தது. மாவட்ட கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின்பேரில், மாவட்ட துணை கண்காணிப் பாளர் மற்றும் திண்டுக்கல் தாலுகா காவல்  ஆய்வாளர், எஸ்பி அலுவலக தனிப்பிரிவு என அனைத்து போலீசாரும் அனுமந்தராயன் கோட்டை பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது, அனுமந்தராயன் கோட்டையிலிருந்து தர்மத்துப்பட்டி செல்லும் சாலையில் உள்ள பிரதர் மேடு என்ற இடத்தில் .அனுமந்தராயன் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலாவின்  கணவரும், திமுக கிளை செயலருமான  இன்பராஜின்  தோட்டத்து வீட்டில், பாண்டிச்சேரியில் கொண்டு வரப்பட்டு  கள்ளச்சந்தையில்  விற்பனைக்காக புதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள சுமார்  11,500   மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. மேலும்  இதைக் கடத்தி வந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  கிராம பகுதியில் காவல்துறையினர் சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.  காவல்துறை சோதனையில் அதிக அளவு மது பாட்டில்கள் பிடிபட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News