மாரண்டஹள்ளி அருகே கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி போலீசார் கைப்பற்றினர்

மாரண்டஹள்ளி அருகே கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கி போலீசார் கைப்பற்றினர்

Update: 2021-06-25 15:15 GMT

பாலக்கோடு அருகே கேசர்குளிடேம் பின் புறம் முட்புதரில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கியை போலீசார் கைப்பற்றினர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாரண்டஹள்ளி காவல் நிலைய பகுதிகளில் போலீசார்  கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் பெல்லுஹள்ளி கேசர்குளி டேம் பின்புறம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது முட்புதரில் கேட்பாரற்று கிடந்த நாட்டு துப்பாக்கியை கைப்பற்றினர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News