பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது .

Update: 2022-04-19 06:30 GMT

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் தீ தொண்டு வார விழாவினை முன்னிட்டு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தலைமை மருத்துவர் டாக்டர்.பாலசுப்ரமணியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தீ விபத்து மற்றும் மழை காலங்களில் ஏற்படும் ஆபத்துக்களில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, தீடீரென பற்றி எரியும் கேஸ் சிலிண்டர்கள் மீது ஈரமான சாக்குபைகளை கொண்டு  அனைக்க வேண்டும், பெட்ரோல், மண்ணென்னை ஆகியவற்றால் ஏற்படும் தீ விபத்துக்களை மணல், மண் ஆகியவற்றை கொண்டு அனைக்க வேண்டும். மற்றும் தீ தடுப்பு கருவிகள் எப்போதும் பயன்படும் வகையில் தயார் நிலையில் வைத்திருக் வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் மற்றும் தீயனைப்பு வீரர்கள் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகைj நிகழ்ச்சிகளை செய்து காட்டினர்.

Tags:    

Similar News