பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-30 06:00 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்,  கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இங்கு கடந்த 5 நாட்களாக அரவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் அரவைக்கு கொண்டு வந்த கரும்புகள் காய்ந்து வருகின்றன.
அரவை நிறுத்தப்பட்டுள்ளதை கண்டித்து, ஆலை நுழைவாயிலில் கரும்பு டிராக்டர்களுடன் விவசாயிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் காய்ந்து கிடக்கும் கரும்பை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News