தர்மபுரி: பாலக்கோடு பகுதியில் பட்டா திருத்த சிறப்பு முகாம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலூகாவில் பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2021-12-16 06:15 GMT

பாலக்கோடு தாலூகாவில் பட்டா பதிவு திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடுவட்டம் கரகத அள்ளி கிராமத்திற்க்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்களுடைய பட்டாவில் பெயர் திருத்தம், உறவு முறை திருத்தம், நிலபரப்பு திருத்தம் உள்ளிட்ட மாற்றங்களை மேற்கொள்ள வருவாய் துறை சார்பில் கடமடை கிராம நிர்வாக அலுவலக கட்டிட வளாகத்தில் சிறப்பு பட்டா பதிவு திருத்த முகாம் நடைப்பெற்றது.

இம்முகாமிற்க்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சாந்தி தலைமை வகித்தார். இம்முகாமில் பாலக்கோடு தாசில்தார் பாலமுருகன், துணை வட்டாட்சியர் சத்யபிரியா, வருவாய் ஆய்வாளர் முருகன், தலைமை வட்ட துனை ஆய்வாளர் பொன் அரிகரசுதன், வி.ஏ.ஓ சாம்ராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் 30க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டன.

Tags:    

Similar News