தருமபுரி மாவட்டத்தில் முற்றிலும் குறைந்தது: ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று

தர்மபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

Update: 2022-03-01 16:45 GMT

தருமபுரி மாவட்டத்தில்  ஒருவருக்கு மட்டுமே கொரோனா:பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கெனவே தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். மாவட்டத்தில் தற்போது 49பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 283 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இந்த தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 165 ஆகும்.குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 35 ஆயிரத்து 833பேர் என மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது

Tags:    

Similar News