பாலக்கோடு அடுத்த கொலசன அள்ளி பகுதியில் 6 மாத பெண் குழந்தை மர்மச்சாவு

பாலக்கோடு அடுத்த கொலசன அள்ளி பகுதியில் ஆறு மாத பெண் குழந்தை மர்மச்சாவு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-01-09 07:15 GMT

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கொலசன அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன் கட்டிட மேஸ்திரி . இவருக்கு தமிழ்மொழி என்ற மனைவியும் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு மாதமான ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் ஆறு மாதமான குழந்தைக்கு நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் உடல்நிலை குறைவால் பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News