சாவுக்கு காரணம் இவர்கள்தான்.. மொபைலில் ஆடியோ வெளியிட்டு பெண் தற்கொலை

சாவுக்குகாரணம் இவர்கள்தான் என மொபைலில் ஆடியோ வெளியிட்டு பெண் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-07-29 15:38 GMT

தற்கொலை செய்துகொண்ட நீலாமணி.

கடலூர் அடுத்த மேற்கு ராமநாதபுரத்தை சேர்த்தவர் கண்ணபிரான் மனைவி நீலாமணி. இவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்ட நிலையில், தனது இரு மகள்களுடன் வசித்து வந்தார்.

இவர் தனது உறவினரான வீரமணி என்பவருக்கு சொந்தமான வயல் வழியாக தனது வயலுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்லும்போது வீரமணி தங்கள் வயல் வழியாக வரவேண்டாம் என அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி நீலாமணி அவ்வழியாக சென்றார். அப்போது வீரமணி அவரது மனைவி ராஜேஸ்வரி தம்பி சச்சிதானந்தம் ஆகியோர் நீலாமணியிடம் தகராறு செய்துள்ளனர்.

இதனால் வேதனை அடைந்த நீலாமணி, தன்னை ஆபாசமாக மூவரும் பேசியதால் தற்கொலை செய்துகொள்கிறேன் எனவும், தனது சாவிற்கு அவர்கள் மூவர் தான் காரணம் என தனது மொபைல் போனில் பேசி பதிவு செய்துள்ளார். பின்னர், களைக்கொல்லி மருந்து குடித்த நீலாமணியை  சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 28ஆம் தேதி அதிகாலை நீலாமணி உயிரிழந்தார்.

இதுகுறித்து நீலாமணியின் தம்பி சிவசக்தி கொடுத்த புகாரின் பேரில், திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் வீரமணி அவரது மனைவி ராஜேஸ்வரி தம்பி சச்சிதானந்தம் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். சாவுக்கு காரணமானவர்கள் பற்றி ஆடியோ பதிவு செய்து வைத்து விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News