காட்டுமன்னார்கோவில் அருகே அரசு மருத்துவர்கள் 3 பேருக்கு கொரோனா

சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார்கோவில் மருத்துவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-05-28 05:30 GMT

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த 3 மாதங்களில் கொரோனா தொற்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா சிகிச்சை மையங்களில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 3 பேர் மற்றும் ஆயங்குடி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் 2 பேர், ஸ்ரீமுஷ்ணம் அரசு ஆஸ்பத்திரி ஆய்வாளர்கள் 2 பேர், வீராணந்தபுரம் சுகாதார ஆய்வாளர் ஒருவர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் சிதம்பரம், திருச்சி, புதுவையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News