சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 50 மாணவிகளுக்கு கொரோனா தொற்று

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 50 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் விடுதி மூடப்பட்டது.

Update: 2022-01-12 05:37 GMT

மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விடுதி மூடப்பட்டது.

கொரோனா மூன்றாம் அலை பரவ தொடங்கியுள்ள நிலையில் உருமாறிய ஓமைக்ரான் மற்றும் கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக 250க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் பல்வேறு விடுதிகள் உள்ளன. இதில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரிகளுக்கு வருகிற 31ந் தேதி வரை விடுமுறை. அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் விடுதிகளை காலி செய்து விட்டு சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் பல்கலைக் கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறை மாணவிகள் சில விடுதிகளில் தங்கி உள்ளனர். சிதம்பரம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தாமரை இல்லம் விடுதியில் 200க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் தங்கி படித்து வந்த நிலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கடந்த சில தினங்களில் அடுத்தடுத்து மருத்துவத் துறை படிப்பு சார்ந்த மாணவிகள் சுமார் 50 பேருக்கும் மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மாணவிகள் தங்கியிருந்த தாமரை இல்லம் மூடப்பட்டது.

இங்கு தங்கியிருந்த மாணவிகள் சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர் மேலும் சில மாணவிகள் வேறு ஒரு விடுதிக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இதையடுத்து தாமரை இல்லம் விடுதியின் வாயில் மூடப்பட்டது.

மேலும் மருத்துவ கல்லூரிக்கு வருகிற 23ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, மேலும் மருத்துவ கல்லூரி வளாகத்தில் அதிகளவில் மாணவர்களுக்கு தொற்று நோய் ஏற்பட்டது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News