கோவை ஆலாந்துறை அருகே கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
Road Accident News Today -கோவை ஆலாந்துறை அருகே கார் மோதி தனியார் நிறுவன டெலிவரி ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பலியான சபரிநாதன்.
Road Accident News Today - கோவை ஆலாந்துறை பகுதியை சேர்ந்தவர் சபரிநாதன் (21). இவர் ( flipkart ) தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பொருட்களை டெலிவரி செய்ய சிறுவாணி சாலையில் சென்று, அங்கு சாலை ஓரத்தில் நின்று செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் சபரிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2