அரசு அலுவலத்தில் பிரதமர் மோடியின் படத்தை வைத்த பாஜக நிர்வாகி கைது

அனுமதியின்றி அரசு அலுவலத்தில் பிரதமர் மோடியின் படத்தை வைத்ததாக பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-01-24 06:00 GMT
அரசு அலுவலத்தில் பிரதமர் மோடியின் படத்தை வைத்த பாஜக நிர்வாகி கைது

பாஸ்கரன்.

  • whatsapp icon

கோவை மாவட்டம், பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 22 ம் தேதியன்று பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையில் வந்த சிலர் அலுவலகத்திற்குள் நுழைந்து பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைத்தனர்.

மேலும் 'பாரத் மாதா கி ஜெ' என முழக்கங்களை எழுப்பினர். இதனைக் கண்ட பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் அனுமதியின்றி பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைப்பது தவறு எனவும், முகக் கவசம் அணியாமல் அலுவலகத்திற்குள் வரக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் படம் வைக்க வேண்டும் எனவும் பாஜகவினர் கூறியுள்ளனர். மேலும் பிரதமரின் புகைப்படத்தை அகற்றினால் அதற்கு திமுக தான் காரணமெனவும், பிரதமர் புகைப்படம் அகற்றப்பட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் புலுவப்பட்டி பேரூராட்சி அலுவலத்தில் அத்துமீறி நுழைந்து பிரதமர் புகைப்படத்தை வைத்ததோடு, கொரோனா நோய் தொற்றை பரப்பும் வகையில் முகக் கவசம் அணியாமல் கூட்டமாக வந்ததாகவும் பேரூராட்சி செயல் அலுவலர் தங்கசாமி ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது ஆலாந்துறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பாஜக அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரனை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News