1130 மது பாட்டில்கள் பறிமுதல் : போலீசார் நடவடிக்கை

கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் நோக்கில் பதுக்கி வைத்தனர்

Update: 2021-06-28 02:21 GMT

பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்

கோவை சுண்டக்காமுத்தூர் அருகே செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான பாட்டிலில் சுத்தம் செய்யும் பேக்டரி உள்ளது. செல்வராஜ் மைத்துனர் விக்னேஷ் என்பவரும், அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் விற்பனையாளர் சங்கர் என்பவரும் கூட்டாக இணைந்து 1130 மதுபாட்டில்களை பதுக்கி வைத்துள்ளனர். சட்ட விரோதமாக கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்ததை குனியமுத்தூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் விரைந்து சென்று மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

காவல்துறை விசாரணையில் பல்வேறு இடங்களில் மதுபாட்டில்கள் வாங்கியதாகவும், அதை கூடுதல் விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் நோக்கில் பதுக்கி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த காவல்துறை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News