பல மாதங்களுக்கு பிறகு நாளை கோவை குற்றாலம் திறப்பு - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கொரோனா பெருந்தொற்று காரணமாக பல மாதங்களாக சுற்றுலா பயணிகளுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.;

Update: 2020-12-26 14:30 GMT

கோவை மாவட்டத்தில் மிக முக்கிய சுற்றுலா தலமாக கோவை குற்றாலம் விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உருவாகி வரும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கோவை குற்றாலம் செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சுற்றுலா தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது.

இதன்படி கோவை குற்றாலம் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் நுழைவுக்கட்டணம் எடுப்பதற்கு முன்பு, வெப்பநிலைமானி கொண்டு வெப்பநிலையை பரிசோதனை செய்யப்படும் எனவும், சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றி திறக்கப்பட உள்ளதாகவும், பயணிகள் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக கூட்டம் அதிகளவில் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News