1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

Update: 2021-08-07 16:52 GMT

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 1 லட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி அவரது நினைவாக தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தலமரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஒரு லட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை தலைமையிட வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 1 லட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்து நாகலிங்க மரக்கன்று ஒன்றை நட்டார்.

3 மாதங்களுக்குள் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடிக்கப்பட இருக்கின்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, நேரு, கனிமொழி, தயாநிதி மாறன், பாலு, உதயநிதி ஸ்டாலின், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொமுண்டனர்.

Tags:    

Similar News