வில்லிவாக்கம் : கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை இந்து அறநிலைய துறை அமைச்சர் துவக்கி வைத்து ஊட்டசத்து உணவுகளை வழங்கினார்.

Update: 2021-07-04 17:22 GMT

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை இந்து அறநிலைய துறை அமைச்சர் துவக்கி வைத்து ஊட்டசத்து உணவுகளை வழங்கினார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. என்.ஆர். எச் மருத்துவமனை சார்பில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கும் நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் சிட்கோ சேகர் தலைமையில் நடைபெற்றது.. இதில் இந்து அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

பின்னர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ஊட்டசத்து உணவுகளை வழங்கினார்... இந்த நிகழ்ச்சியில் எம்.ஆர்.எச் மருத்துவமனை இயக்குனர் முரளி கிருஷ்ணன் மாவட்ட பிரதிநிதி கோபால கிருஷ்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News