வெண்டிலேட்டர் கோளாறு: 2கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு...!

Update: 2021-04-06 16:30 GMT

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் இருவர் வெண்டிலட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக போதிய ஆக்சிசன் கிடைக்காததால் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் தற்போது வெண்டிலேட்டர் முறையாக சரிப்படுத்த பட்டு விட்டதாகவும் மற்ற நோயாளிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும் மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News