பெசன்ட் நகர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்மணி
பெசன்ட் நகர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்மணியை அப்பகுதியில் பணியில் இருந்த காவலர் காப்பாற்றினார்.;
கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்.
சென்னை பெசன்ட் நகர் கவர்னர் கெஸ்ட்ஹவுஸ் பின்புறம் உள்ள கடற்கரையில் ஒரு பெண்மணி கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராஜா(47), என்ற போலிஸ் இதனை கண்டவுடன் அப்பெண்மணியை காப்பாற்றி சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணையில் தற்கொலைக்கு முயன்றவர் புரசைவாக்கத்தை சேர்ந்த மகேஸ்வரி(59), என்பதும் தனது மகன் மற்றும் மருமகள் சரிவர கவனிக்காமல் விட்டதால், மன உளைச்சலில் தனது கணவர் இறந்த தினமான இன்று தற்கொலை செய்து கொள்ள வந்தது தெரியவந்தது.
பின்னர் அவரது மருமகளை வரவழைத்து போலீசார் அறிவுரை வழங்கி உடன் அனுப்பி வைத்தனர்.