தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-09-23 11:36 GMT

தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

மாற்றப்பட்ட அதிகாரிகளும் அவர்கள் முன்பு வகித்த பதவிகளும்:

1. சென்னை ஆயுதப் படை ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி ஐபிஎஸ் - சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த அபய் குமார் சிங் - சென்னை ஆயுதப் படை ஏடிஜிபியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஐஜி மகேந்தர் குமார் ரத்தோட் - தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஐஜி/உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலராக இருந்த கார்த்திகேயன் - திருச்சி மாநகரக் காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

5. திருச்சி மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் - சென்னை காவல்துறை பயிற்சிக் கல்லூரி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஐஜி சரவண சுந்தர் - திருச்சி சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. திருச்சி சரக டிஐஜியாக இருந்த ராதிகா - சென்னை டிஐஜியாக (பொது) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

8. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிஷா - சென்னை காவல்துறை கணினிமயமாக்கல் பிரிவின் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.யாக இருந்த மாடசாமி - சேலம் வடக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

10. சேலம் குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக இருந்த வேதரத்தினம் - சென்னை டிஜிபி அலுவலகத்தில் உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News