தங்கம் விலை மீண்டும் உயர்வு: ரூ.35 ஆயிரத்தை கடந்தது ஒரு சவரன்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று, ஒரு சவரன் ரூ.35 ஆயிரத்தை கடந்து விற்பனையாகிறது.

Update: 2021-09-22 06:00 GMT

கோப்பு படம்

சென்னையில், கடந்த வாரம் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. தொடர்ச்சியாக 4 நாட்கள் சரிந்து சவரனுக்கு ரூ.700க்கு மேல் குறைந்தது. இதன் மூலம், ரூ.35 ஆயிரத்துக்கு மேல் விற்பனையான தங்கம்,  விலை ரூ.35 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. சாமானிய மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஒருவேளை, தங்கம் விலை இப்படியே குறைந்துவிடும் என மக்கள் எண்ணிக் கொண்டிருந்த வேளையில் மீண்டும் ஏற்றத்தைக் கண்டுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,371க்கு விற்றது. ஒரு சவரன் தங்கம் ரூ.34,968க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்து மீண்டும்,  ரூ.35 ஆயிரத்தை எட்டியுள்ளது. இன்றைய நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு ரூ.39 உயர்ந்து, ரூ.4,410க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.35,280க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை, கிராமுக்கு 91 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.65.01க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.65,010க்கும் விற்பனையாகிறது.

Tags:    

Similar News