தனி நல வாரியம்: அமைப்பு சாரா மின் பணியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தனி நலவாரியம் அமைக்க வேண்டுமென அமைப்பு சாரா மின் பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுசெயலாளர் சேக்கிழார் வலியுறுத்தியுள்ளார்

Update: 2021-09-22 03:55 GMT

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அமைப்பு சாரா மின் பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுசெயலாளர் சேக்கிழார்

தனி நலவாரியம் அமைக்க வேண்டுமென அமைப்பு சாரா மின் பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுசெயலாளர் சேக்கிழார் வலியுறுத்தியுள்ளார்

தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர் முன்னேற்ற நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா  சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு மின் ஆய்வாளர் - தலைமை அலுவலகம் வளாக வாயிலில் கூட்டமைப்பின் பொது செயலாளர் சேக்கிழார் தலைமையில் நடைபெற்றது. 

இதையடுத்து நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில்,  மின்வாரியத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தமிழ்நாடு அமைப்புசாரா மின்பணியாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். மின் பணியாளர்களின் H மின் உரிமத்திலிருந்து B மின் உரிமை மாறுதலுக்குறிய தேர்வை ஆண்டு தோறும் நடத்த வேண்டும். தமிழ்நாடு மின் உரிமம் வழங்கல் வாரியத்தால் வழங்கப்படும் தனிநபர் மின் உரிமங்களை வைத்திருப்போர் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும்  அந்த உரிமத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட  பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News