சிவசங்கர் பாபா இ மெயில் முடக்கம்
பள்ளி மாணவிகளின் பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் இமெயில் கணக்கை சிபிசிஐடி போலீசார் முடக்கி உள்ளனர்.;
சென்னை : பள்ளி மாணவிகளின் பாலியல் தொல்லை புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவின் இமெயில் கணக்கை சிபிசிஐடி போலீசார் முடக்கி உள்ளனர்.
அப்பள்ளியில் ஆய்வு செய்த போலீசார் அவர் பயன்படுத்திய பென்டிரைவ், லேப்டாப் உள்ளிட்ட பல முக்கிய பொருட்களை கைப்பற்றி உள்ளனர்.
இந்நிலையில் சிவசங்கர் பாபா பயன்படுத்திய யாஹூ இமெயில் கணக்கை தற்போது போலீசார் முடக்கி உள்ளனர். அந்த மெயிலில் ஏராளமான ஆபாச புகைப்படங்கள் மற்றும் மாணவிகளுடன் அவர் சாட் செய்த ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இதில் உள்ள விவரங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.