பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டில் அரசு அதிரடி முடிவு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Update: 2021-07-15 08:56 GMT

பள்ளி மாணவிகள் (பைல் படம்)

 தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் தேர்வு எழுதிய பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசுத் தேர்வுத் துறை, வெளிமாநிலங்கள், வேறு பாடத்திட்டங்களில் பத்தாம் வகுப்புப் படித்து தற்போது பிளஸ் 2 வகுப்புத் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவா்களின் மதிப்பெண்களைப் பள்ளிகளிலிருந்து பெற்றது.

தொடா்ந்து, மாணவா்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்கான முறைகளை அரசாணையாக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் காகா்லா உஷா கடந்த திங்கள்கிழமை வெளியிட்டாா்.

தற்போது பிளஸ் 2 மாணவா்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணிகள் நிறைவுபெற்றுள்ளதால், அரசின் அனுமதி கிடைத்தவுடன், தேர்வு முடிவுகள் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதியை அரசு தேர்வுத்துறை விரைவில் அறிவிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News