ஆபத்தை உணராமல் அரசு பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள் விபத்து ஏற்படும் விதமாக ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-04-08 05:45 GMT

திருவொற்றியூர் அருகே தண்டையார்பேட்டை பகுதியில் மாநகர பேருந்தில் பள்ளி மாணவர்கள் விபத்து ஏற்படும் விதமாக ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எண்ணூர் இருந்து தண்டையார்பேட்டை மார்க்கமாக செல்லும் தடம் எண் 4 பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் கூரை மீது ஏரி பயணம் செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில், மாணவர்கள் படிகட்டில் தொங்கிக்கொண்டும், பேருந்து ஜன்னலில் ஏறி நின்றப்படி பயணம் செய்கின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகர பேருந்துகளில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்வதால் விபத்து ஏற்படும் என பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.  மேலும் ஆபத்து விளைவிக்கும் வகையில் பயணம் செய்வதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக பள்ளி செல்லும் நேரங்களில் பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags:    

Similar News