சென்னையில் 100 கிலோ மாவா போதைப் பொருள் பறிமுதல்: தம்பதி கைது

சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரில் 100 கிலோ மாவா பறிமுதல் செய்து தம்பதியை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-09-24 17:45 GMT

சென்னையில் மாவா என்கிற போதைப்பொருள் வைத்திருந்ததால் கைது  செய்யப்பட்ட தம்பதி

சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகர் 3வது தெருவில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட போதை பொருளான மாவா விற்பனை செய்வதாக கொடுங்கையூர் காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, போலீசார் அந்த வீட்டை சோதனை செய்ததில் சுமார் 100 கிலோ எடையுள்ள மாவா விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து வீட்டில் இருந்த இருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், உஷா(38) மற்றும் காளியப்பன் (45 ) ஆகிய இருவரையும் கைது செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டதில், போதை பொருளான மாவா விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.

மேலும், அரசால் தடை செய்யப்பட்ட மாவா போதை பொருளை  யார் யாருக்கு  எங்கு எத்தனை கிலோ விற்பனை செய்யப்பட்டது பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News