செயலிழந்த பி.எஸ்.என்.எல். தொலைபேசிக்கு இறுதி சடங்கு நடத்தி போராட்டம்

திருவொற்றியூரில் செயலிழந்த பி.எஸ்.என்.எல். தொலைபேசிக்கு இறுதி சடங்கு நடத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2022-04-28 05:07 GMT

சென்னையில் செயல்படாத தொலைபேசிக்கு இறுதி சடங்கு நடத்தி நூதன போராட்டம் நடத்தப்பட்டது.

திருவொற்றியூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி, தொண்டர் இயக்க மாநில தலைவரான இவரது அலுவலகத்தில் உள்ள 044 - 25990099 என்ற அரசு பி..எஸ்.என்.எல். தொலைபேசி எண்கடந்த இரண்டு மாதங்களாக வேலை செய்ய வில்லையாம்.

இது குறித்து தொலைபேசி உயரதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பயனில்லை என்று கூறப்படுகிறது . இதில் விரக்தி அடைந்த சமூக ஆர்வலர் தொண்டன் சுப்பிரமணி செயலிழந்த தொலைபேசிக்கு நூதன முறையில் இறுதி சடங்கு நடத்தும் போராட்டம் நடத்தினர்.

அப்போது எல்லையம்மன் கோவில் சந்திப்பில் உள்ள அவரது சொந்த இடத்தில் செயலிழந்த தொலைபேசிக்கு மாலை அணிவித்து தாரை தப்பட்டைகள் முழங்க, ஒப்பாரி வைத்து நுாதன போராட்டம் நடத்தினர் .பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக தொலைபேசி வைக்கப்பட்டது.

மேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தனது நிலத்தில் செயல்படாத தொலைபேசியை 29 ம் தேதி அடக்கம் செய்ய போவதாகவும அவர் அறிவித்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

Tags:    

Similar News