கடந்த 3 மாதத்தில் சென்னையில் 25,783 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது

குடியிருப்பு நலச் சங்கங்களின் சார்பில் 1,394 மரக்கன்றுகள் மற்றும் பிற அமைப்பினர் சார்பில் 10 ஆயிரத்து 965 மரக்கன்றுகள் என மொத்தம் 25 ஆயிரத்து 783 மரக்கன்றுகள் நட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்தது.

Update: 2021-08-12 13:26 GMT

(பைல் படம்) மரக்கன்றுகள் நடுதல் 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மே மாதம் 7-தேதி முதல் கடந்த 9-தேதி வரையிலான 3 மாதத்தில் 439 இடங்களில் மாநகராட்சி சார்பில் 13, 424 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

 மேலும் குடியிருப்பு நலச் சங்கங்களின் சார்பில் 1,394 மரக்கன்றுகள் மற்றும் பிற அமைப்பினர் சார்பில் 10 ஆயிரத்து 965 மரக்கன்றுகள் என மொத்தம் 25 ஆயிரத்து 783 மரக்கன்றுகள் நட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News