அரசுக்கு வணிகர் சங்கம் துணையாக நிற்கும்- விக்கிரமராஜா அறிவிப்பு!

தமிழக முதல்வர் எடுக்கும் முயற்சிகளுக்கு வணிகர் சங்கம் துணை நிற்கும் என விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-31 12:08 GMT

விக்கிரமராஜா

சென்னையில் ஓட்டேரியில் வாகனங்களில் மளிகை பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்யும் திட்டத்தை  வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதலமைச்சர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் வணிகர் சங்கம் துணை நிற்கும். சோதனை காலத்தில் மக்களுக்கு துணை நிற்கிறோம், தொலைபேசி ஆர்டர் மூலமும், வாகனங்கள் மூலம் லாப நோக்கம் இல்லாமல் மளிகை பொருட்களை குறைந்த விலையில் விற்று வருகிறோம் என்றும், வருகிற 6 நாட்களிலும் வணிகர்கள் பொருட்களை வீடு தேடி சென்று விற்பனை செய்து சேவை செய்ய வேண்டும் என வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், சென்னை மாநகராட்சி மற்றும் வணிகர் சங்கம் இணைந்து 2197 வாகனங்கள் மூலம் மளிகைப் பொருட்களை இன்று முதல் வரும் 7 தேதி வரை விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எங்கேனும் பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் தொலைபேசியில் அழைத்தால் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும் என்றார்.

Tags:    

Similar News