சென்னை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 2 பேர் பாலியல் புகார்!

சென்னை பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு பாலியல் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2021-05-28 05:03 GMT
ராஜகோபாலன்

சென்னை கே.கே. நகர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு  செய்து ஜூன் 8-ஆம் தேதி வரை சிறை தண்டனை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புழல் சிறையில் உள்ள சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் இரண்டு பேர் பாலியல் புகார் வந்துள்ளது. ஏற்கனவே முன்னாள் மாணவி அளித்த பாலியல் தொல்லை புகாரில் ராஜகோபாலன் கைதான நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து அசோக் நகர் மகளிர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News