ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு முக்கியம்: பாமக தலைவர் ஜி.கே.மணி .

தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

Update: 2021-05-23 01:46 GMT

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது.

பாமக தலைவர்: ஜி.கே. மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 10தேதி முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்தது, கடந்த 3 நாட்களாக இந்த கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. முழு ஊரடங்கு இருந்தாலும் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை. 

மாவட்டந்தோறும் கூடுதல் மருத்துவமனைகள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என பாமக சார்பிக் கோரிக்கை வைத்துள்ளோம்.

தமிழக அரசு முழு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்றார்.

Tags:    

Similar News