நாகர்கோவில்-கோவை ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

கோவில்பட்டிக்கும், கோவை மாநகருக்கும் இடையே வணிகத் தொடர்புகள் நிறைய உண்டு.இரு நகரங்களுக்கும் மக்கள் சென்று வருகின்றார்கள்;

Update: 2021-10-08 18:00 GMT

வைகோ (பைல் படம்)

நாகர்கோவில் - கோவை  (எண் எண் 02667 )  ரயில்  கோவில்பட்டியில் நிறுத்தம் வேண்டுமென மதிமுக பொதுச்செயலர் வைகோ ரயில்வே துறைக்கு  கோரிக்கை  விடுத்துள்ளார்.

கோவில்பட்டி நகரம், தென் தமிழ்நாட்டில் முதன்மையான வணிக மையங்களுள் ஒன்று ஆகும். பருத்தி, மிளகாய் மற்றும் தீப்பெட்டிகள், கோவில்பட்டியில் இருந்து நாடு முழுமையும் செல்கின்றன. கோவில்பட்டிக்கும், கோவை மாநகருக்கும் இடையே வணிகத் தொடர்புகள் நிறைய உண்டு. எனவே, நாள்தோறும் மக்கள் இரண்டு நகரங்களுக்கும் சென்று வருகின்றார்கள்.

ஆனால், நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும்  ரயில்( எண் 02667,) கோவில்பட்டியில் நிற்பது இல்லை. எனவே, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மேற்கண்ட ரயில், கோவில்பட்டியில் நின்று செல்கின்ற வகையில் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக் கொள்வதாக, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர்-நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ, மின்அஞ்சல் மூலமாக  கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News