கொரோனா வார்டாக மாறும் மாணவர் விடுதிகள்: பாதிப்பின் உச்சத்தில் சென்னை..!

Update: 2021-04-10 07:51 GMT

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவிவரும் நிலையில், திருவல்லிக்கேணியில் உள்ள மாநில கல்லூரி மாணவர் விடுதியை 250 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள மாநில கல்லூரி மாணவர் விடுதியை கொரோனா வார்டாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. அந்த வகையில், மாணவர் விடுதியை சுத்தப்படுத்தி, கொரோனா நோயாளிகள் தங்கும் வார்டாக மாற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். நோயாளிகள் சிகிச்சைக்கு ஏற்ற மாதிரி அங்கு 250 படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News