யூ டியூப்பர் கிஷோர் கே.சுவாமி மேலும் ஒரு வழக்கில் கைது
யூ டியூப்பர் கிஷோர் கே.சுவாமி மேலும் ஒரு வழக்கில் சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.;
சென்னை :
முன்னாள் முதல்வர்கள், அண்ணா, கருணாநிதி குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட யூ டியூப்பர் கிஷோர் கே.சுவாமி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் மூன்றாவதாக மேலும் ஒரு வழக்கில் சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.
பத்திரிக்கையாளரை மிரட்டியதாக எழுந்த புகார் குறித்த இன்னொரு வழக்கில் கைது செய்யப்பட்ட அவரை ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.