இராஜஸ்தானில் தேசிய பளு தூக்கும் போட்டி: செங்கல்பட்டு வீரர்கள் சாதனை

இராஜஸ்தானில் நடைபெற்ற தேசிய பளு தூக்கும் போட்டியில் செங்கல்பட்டு வீரர்கள் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்று சாதனை படைத்தனர்.

Update: 2022-01-06 00:30 GMT

பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற முஸ்தாக், ஆசிப் மற்றும் அர்ஷத் ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு தரப்பட்டது. 

இராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்று,  வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கங்களை  செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் புதுப்பட்டினம் பகுதியை சார்ந்த முஸ்தாக், ஆசிப் மற்றும் அர்ஷத் ஆகியோர் வென்றனர்.

வெற்றி பெற்று மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்த்த வீரர்களை, புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால் தலைமையில்,  அனைத்து கட்சி தலைவர்களும் பொதுமக்களும், இளைஞர்கள், மகளிர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் ஒன்று திரண்டு சிறப்பாக வரவேற்றனர். பாராட்டி மகிழ்ந்தனர். 

Tags:    

Similar News