குவைத்தில் இருந்து விமானத்தில் கடத்திய ரூ.4.55 லட்சம் தங்கம் பறிமுதல்

குவைத்திலிருந்து விமானத்தில் கடத்தி வந்த ரூ.4.55 லட்சம் மதிப்புடைய 880 கிராம் தங்கப்பசை, சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-03-03 01:45 GMT

குவைத்தில் இருந்து சென்னை சா்வதேச விமான நிலையத்திற்கு தனியாா் பயணிகள் விமானம் நேற்று காலை வந்தது. அதில் வந்த பயணிகளை,  சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனா். அப்போது வேலூரை சோ்ந்த சக்தி ஜெயகிருஷ்ணன் (32) என்ற பெண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து பெண் சுங்க அதிகாரிகள்,  பயணி சக்தி ஜெயகிருஷ்ணனை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனா். பெண் பயணியின் உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 880 கிராம் தங்கப்பசையை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ.4.55 லட்சம்.

இதையடுத்து தங்கம் கடத்தி வந்த பெண் பயணி சக்தி ஜெயகிருஷ்ணனை சுங்கத்துறையினா் கைது செய்து விசாரித்தனா். அப்போது சென்னை ராயபுரத்தை சோந்த நாகூா்கனி (45) என்ற கடத்தல் ஆசாமிக்காக இந்த தங்கத்தை கடத்தி வந்ததாகவும், அவா் தற்போது விமான நிலைய வெளிப்பக்கம் நிற்பதாகவும் கூறினாா். இதையடுத்து சுங்கத்துறையினா், தங்கத்தை பெற்று செல்வதற்காக வெளியே காத்திருந்த நாகூா்கனியையும் கைது செய்தனா்.

Tags:    

Similar News