வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதியவேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி சென்னை பாரிமுனையில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Update: 2021-09-27 09:33 GMT

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் இன்று (27.09.21) நடத்தும் பாரத் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக எஸ்டிபிஐ கட்சியினர் சென்னை  குறளகம் அருகில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தியது.

மத்திய சென்னை மாவட்ட (வடக்கு) பொதுச் செயலாளர்  ராஜா தலைமையில் துறைமுகம்  நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட (வடக்கு) நிர்வாகிகள் மற்றும்  வட்டம்,கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டு மத்தியஅரசை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்

Tags:    

Similar News