விஷவண்டு கடித்து சென்னை காசிமேடு எஸ்ஐ பலி

விஷ வண்டு கடித்ததால், சென்னை காசிமேடு காவல்நிலைய எஸ்ஐ செல்வம் உயிரிழந்தார்.

Update: 2021-09-14 04:30 GMT

மாதிரி படம்

சென்னை ஒட்டேரி காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வம்(58). இவர், காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில், எஸ் ஐ ஆக இருந்து வந்தார். கடந்த2 ஆண்டுக்கு முன்பாக, அவரை விஷ வண்டு கடித்தது. இதற்கு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த மாதம் எஸ்.ஐ செல்வத்தின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில்,  சிகிச்சை பலனின்றி நேற்றிரவு எஸ்.ஐ. செல்வம் பரிதபமாக இறந்தார்.

Tags:    

Similar News