டி.என்.பி.எஸ்.சி புதிய உறுப்பினர்கள் நியமனம் :தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு நான்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2021-07-14 07:27 GMT

பைல் படம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு நான்கு புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, முனியநாதன், ஜோதி சிவஞானம், அருள்மதி, ராஜ் மரியசூசை ஆகியோரை புதிய உறுப்பினர்களாக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் 62 வயதை எட்டும் வரை உறுப்பினர் பதவியில் நீடிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News