தபால் வாக்குகள் மே 2 வரை பெறப்படும்: தேர்தல் ஆணையர் அதிரடி அறிவிப்பு

Update: 2021-04-01 10:58 GMT

தமிழகத்தில் தபால் துறை மற்றும் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 காலை 8 மணி வரை பெறப்படும் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது.அதன்படி காவல்துறை மற்றும் அரசு ஊழியர்களுக்கான தபால் வாக்குகள் மே 2 காலை 8 மணி வரை பெறப்படும் என தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News