கொரோனாவிற்கு தலைமைக் காவலர் உயிரிழப்பு - போலீசார் அதிர்ச்சி

சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் கொரோனாவால் உயிரிழந்தது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Update: 2021-04-23 08:45 GMT

சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர் கருணாநிதி, வயது 48. இவர் கடந்த 13ஆம் தேதி வயிற்று வலி காரணமாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காகச் சென்றார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் மறுநாள் (14.04.21) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மேல் சிகிச்சைக்காக ஏப்.21 அன்று நுங்கம்பாக்கம் திருமூர்த்தி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று காலை 5.35 மணி அளவில் திடீர் மாரடைப்பு காரணமாக கருணாநிதி உயிரிழந்தார். அவரது மரணம் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News